Friday, February 28, 2014

கம்பிக்குப் பின்னாலே .

ரொட்டி விற்றவன்
கோடி கண்டான்.

ஐந்தும் பத்துமாகச்
சீட்டுப் பிடித்து

ஏழை எளியவர்களிடம்
கை நீட்டி வாங்கி  .

சிறுக வாங்கி
பெருகச் சேர்த்தான்.

அந்தப் பண்டிகைக்கு
கொடுக்கப்படும் என்று அறிவிப்புடன்.


ஐ ந்து கோடி ஆனது
பத்து கணக்க்ட முடியாதது ஆனது.


இரு சக்கர வண்டியிலே  சென்றவன்
பறக் கிறான் அடுத்த ஊருக்கு.

இரட்டையாகப்   பிறந்த மகன்களுக்கு
ஊர் கூட்டித்  திருமணம்.

செலவு ஐநூறு கோடி
மந்திரிகளின் வருகை யோடு.

தவற்றை கண்டு பிடித்தவுடன்
 அட்டைப் பெட்டியில்  கணக்குகளை அனுப்பினான்.


என்ன ஒரு நாடகம்
அம்பலம் ஆனது  அவன் திருட்டுத் தனம் .

மிகச் எளிதாகச் சுருட்டினான் .
இருபதாயிரம் கோடியை


இன்று அடைப்பட்டான்
கம்பிக்குப்   பின்னாலே .






No comments:

Post a Comment