Thursday, February 6, 2014

வெறுத்துப் போய் .

கவிதை ஒன்று எழுதினேன்
மனம்  சொன்னது நன்றாக  இல்லை  என்று.

 மாற்றி எழுதினேன் எதுகை மோனையோடு
இதுவும் நன்றாக இல்லை என்றது  .

திரும்பவும் எழுதினேன்  சொல் நயத்தோடு
 அதை விட மோசம் என்றது .

விளக்கம் கூட்டினேன் வர்ணித்து மெருகு ட்டினேன் 
அய் யையோ என்றது.

விட்டு விட்டேன் வந்தது வரட்டும் என்று
வெறுத்துப் போய் .

மனம் சும்மாவா விட்டது  தட்டி எழுப்பியது
எழுது   விமர்சையாக  இருக்கிறது என்று

No comments:

Post a Comment