Wednesday, February 5, 2014

தெரிந்தும் என் செய்ய?

ஊருக்கு நல்லவன்
வீட்டில் எப்படி ?

ஊருக்கு  அமைதியானவன்
 வீட்டில் எவ்வாறு?

ஊருக்கு  அன்பானவன்
வீட்டில் என்னவோ?

எதிர் மறையோ  என்று
கொண்டால் வியப்பில்லை .

அதுவே  நடைமுறை
அனுபவம் சொல்லும்

நல்லவன் தீயவன்
என்று அல்ல

நல்லவன்  மட்டும்
அமைதி மட்டும்

அன்பு மட்டும்
என்று இல்லாமல் .

கோபம், நிறைய
குத்தல் நிறைய

வெறுப்பு அதிலும் கூட
என்று  காட்டி

ஊருக்கு ஒரு வாழ்வு
வீட்டில் ஒரு   நுழைவு

தெரியாமல் இல்லை
 தெரிந்தும் என் செய்ய?



No comments:

Post a Comment