Tuesday, February 18, 2014

புல் வெளியில்

புல்லின் மீது ஒரு பனித்துளி
வெள்ளி  போல் மின்ன


அதன் அருகே ஒரு குருவி
கொண்டை  சுற்று உயர .

அதன் பக்கம் ஒரு தட்டான்
பறந்து இறங்க.

அதன் நெருக்கத்தில்  ஒரு எறும்பு
கருமேமே என்று வேலை செய்ய .

 சற்று தள்ளி நான் ஒரு மனிதன்
ஏதும் செய்யாமல் வியந்து நிற்க.

அங்கு அந்த புல்  வெளியில்
அரங்கேறியது  அரிதான  காட்சி.

No comments:

Post a Comment