மனதும் மனதும் கூடினால்
காதல் கூடும் .
உடலும் உடலும் கூடினால்
இச்சை மிகும்.
பணமும் பணமும் கூடினால்
வளம் பெருகும் .
படிப்பும் படிப்பும் கூடினால்
புரிதலும் அதிகம்
பின்னர் ஆளும் காலமும் பொறுத்து
சண்டையும் நிறைய .
நட்சத்திரமும் நட்சத்திர,மும் கூடினால்
சிறப்பு என்று கூறி
திருமணங்கள் மனப் பொருத்தம் காணாமல்
மற்ற பொருத்தங்கள் கண்டு நிகழ
முறிவுகள் தோன்று கின்றன கூடுதலாகவே
No comments:
Post a Comment