Wednesday, February 5, 2014

பன் முகத் தேடலிலே

ஒரு முகம்  கண்டு
 மயங்கினாள்.

மறு முகம்  நோக்கி
மருண்டாள் .

எம்முகம் உண்மையோ
எம்முகம் உறுதியோ

முகம் பார்த்து
பழகும் முறையோ

முகம் சொல்லும்
 மனதின் உணர்வை

முகம் சொன்னது
இன்று ஒன்றாக.

முகம் சொல்லவில்லை
நாளை எனதாக.

முகமும் பொய் சொல்லும் போல்
பன் முகத் தேடலிலே

No comments:

Post a Comment