பா தி நாட்கள் இங்கே
மீதி நாட்கள் அங்கே
என்ன வாழ்க்கையோ
தெரியவில்லை எனக்கு
புரியவில்லை எனக்கு.
அங்கே மூடி
இங்கே திறந்து
இங்கே சுருக்கி
அங்கே விரித்து
விளங்கவில்லை எனக்கு.
.விட்டதை தொடங்கி
தொடங்கியதை விட்டு
பாதி பாதியாக
இங்கும் அங்கும்
தலை சுற்றுகிறது எனக்கு .
ஆதரவாக கை நீட்ட
கனிவாகப் பேச
நின்று கேட்க
நிலைத்து ஓர் இடத்தில்
என்னால் முடியவில்லை
எங்கு சென்றாலும்
பிக்கல் பிடுங்கல்
பொறாமை ,போட்டி
வஞ்சகம், கடுப்பு
என்னால் தாங்க முடியவில்லை
இதற் கெல்லாம் ஒரே இடம்
மன அமைதியும், நிம்மதியும்
நிதர்சனமான் நிரந்தரம்
எங்கே என்று மனம் அலைய
தோன்றுகிறது இறப்பு ஒன்றே.
No comments:
Post a Comment