கட்டினான் காளையை கம்பத்திலே
ஜல்லிக்கட்டில் வென்ற சிங்கக் குட்டியை .
நெய்யும் சோறும் படைத்தான்
பழ மும் தேனும் கொடுத்தான் .
திமிறி ஓடிய காளை
அலுத்துச் சலித்து படுத்தது.
போட்டிக்காக அதை ஆட்டுவித்த ஆட்டம்
கொஞ்சமா நஞ்சமா பாவம் .
ஓட ஓட விரட்டி மேடும் மலையும் ஏறி
கொளுத்த உணவை அளித்து .
தின்ன முடியாவிட்டாலும் திங்க வைத்து
உடல் வலுவை பெருக்கி ஒரு வழியாக்கி
போட்டியில் பங்கேற்ற போது தூண்டி
வேகப்படுத்தி வெற்றிக் கொள்ள வைத்தான்.
வெற்றியை தேடிக் கொடுத்த காளை
மறு நாள் எழுந்திருக்கவில்லை
No comments:
Post a Comment