Saturday, February 8, 2014

ஜல்லிக்கட்டில்

கட்டினான் காளையை கம்பத்திலே 
ஜல்லிக்கட்டில் வென்ற  சிங்கக் குட்டியை .

நெய்யும் சோறும்  படைத்தான்
பழ மும் தேனும்    கொடுத்தான் .

திமிறி ஓடிய காளை  
அலுத்துச் சலித்து படுத்தது.

போட்டிக்காக  அதை ஆட்டுவித்த ஆட்டம்  
கொஞ்சமா நஞ்சமா  பாவம் .

ஓட ஓட விரட்டி  மேடும் மலையும் ஏறி 
கொளுத்த  உணவை அளித்து .

தின்ன முடியாவிட்டாலும் திங்க வைத்து 
உடல் வலுவை பெருக்கி  ஒரு வழியாக்கி

போட்டியில் பங்கேற்ற போது   தூண்டி 
 வேகப்படுத்தி  வெற்றிக் கொள்ள வைத்தான்.


வெற்றியை தேடிக் கொடுத்த காளை 
மறு நாள் எழுந்திருக்கவில்லை   


No comments:

Post a Comment