Wednesday, February 12, 2014

ஆறே !

காடு மேடு  ஓடி 
கரை சேரும் 
 ஆறே !

வளைந்து ஓடி
ஊருக்குள் புகுந்து  ஓடும் 
ஆறே !

பாய்ந்து ஓடி 
வளம் காணும் 
ஆறே !

தேங்காமல் ஓடி 
மனிதரைத் தாங்கும் 
ஆறே!

தடை காணாமல் ஓடி 
தனக்கில்லாமல் பயன் தரும்  
ஆறே!

உன்னிடம் ஓடி 
 வரத் துடிக்கிறேன் 
ஆறே !

No comments:

Post a Comment