காடு மேடு ஓடி
கரை சேரும்
ஆறே !
வளைந்து ஓடி
ஊருக்குள் புகுந்து ஓடும்
ஆறே !
பாய்ந்து ஓடி
வளம் காணும்
ஆறே !
தேங்காமல் ஓடி
மனிதரைத் தாங்கும்
ஆறே!
தடை காணாமல் ஓடி
தனக்கில்லாமல் பயன் தரும்
ஆறே!
உன்னிடம் ஓடி
வரத் துடிக்கிறேன்
ஆறே !
No comments:
Post a Comment