Thursday, February 20, 2014

அவன் இன்று அவராக

தகமை சால்  என்றும்
மாண்பு மிகு என்றும்
  மாட்சிமை பொருந்திய என்றும்
மேதகு என்றும்
அழைப்பார்கள்  அவனை

இவ்வளவு  பெருமைகள்
 அவனுக்கு  அடை மொழியாக
வந்த பின்னும்
 நான் அவனை மரியாதை
கொடுத்து  அழைக்க விரும்பவில்லை .

தன்மையே இல்லாதவன்
பண்பே இல்லாதவன்
ஒழுக்கமே இல்லாதவன்
மேன்மையே இல்லாதவன்
அவன் ஒரு வஞ்சகன்.

இன்று அவனிடம் பணம் நிறைய
அவனிடம் பதவி பெரிய
வசதி மிகுந்த
ஆடம்பரம் அத்கம்
அவன் இன்று அவராக
திரிகிறான் வெள்ளையும் சொள்ளையுமாக 


No comments:

Post a Comment