Wednesday, February 5, 2014

பூங்கா

பூவும் காயும் சேர்ந்தது பூங்கா
இளைப்பாற மனிதன்  செய்தது  பூங்கா.
அள்ளிக் கொடுக்கும் அழகினில்
ஆய்ந்து  ஓய்ந்து  களைப் பினிலே
மடிந்து அமர்ந்து சாய் வதனில்
நிறை காணும் பூங்கா .

காலாற நடக்க புல்  படுக்கை விரிவாக
குழந்தைகள் குதித்து விளையாட பரவலாக
  ஆற அமரப் பேசி சிரிக்க நாற்காலிகள்  ஆங்கா ங்கே
காதலர்கள் கொஞ்சி மகிழ மரங்கள்  ஒதுக்குப்புறமாக வே
பசுமையும்  வண்ண ஓவியமாக காட்சியளிக்கும்
 அழகு மிளிரும் பூங்கா.
  

No comments:

Post a Comment